மீண்டும் வீரியமாக பரவும் கொரோனா? மருத்துவர்களின் கருத்து இது தான்!
சீனாவின் முக்கிய நகரமான ஷாங்காயில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், இது குறித்து முழு விவரத்தை தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த பதிவை கடைசி வரை படித்து தெரிந்து கொள்ளவும்.
மீண்டும் கொரோனா:
கொரோனா பெருந்தொற்று கடந்த மார்ச் 2020 ம் ஆண்டு சீனாவை தொடர்ந்து உலக நாடுகளில் பரவத் தொடங்கியது. இதனால் ஏராளமான மக்கள் பாதிப்படைந்தனர். அதுமட்டுமின்றி, டெல்லி, ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த தொற்று அதிகமாக பரவியது. இதனால் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாத்து கொள்ள கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டது. இந்த தடுப்பூசி இரண்டு தவணையாக போடப்பட்டது.
TN Job “FB Group” Join Now
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த தடுப்பூசி கண்டிப்பான முறையில் போடப்பட்டன. சீன அரசு ஜீரோ கோவிட் பாலிசியை கடைபிடித்து வந்ததால் அந்த தொற்றின் வேகம் கட்டுக்குள் வந்ததாக கூறப்படுகிறது. மீண்டும் கொரோனா பரவாமல் இருக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டது. எவ்வளவு தான் கொரோனா நடவடிக்கை கடைப்பிடித்தாலும் கொரோனாவின் வீரியம் அதிகமாக காணப்பட்டது. அதன்படி, சீன நாட்டின் முக்கிய பகுதியான ஷாங்காய் நகரத்தில் செயல்பட்ட கேளிக்கை விடுதி கொரோனா தொற்றின் பரவலுக்கு காரணமாக மாறி விட்டதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதாவது, சீனாவின் முக்கிய நகரமான இந்த விடுதியில் கொரோனா பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இந்த நகரத்தில் மட்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்த அறிவிப்பு வரும் வரை கடைகள் மற்றும் வணிக ஊடகங்கள் உள்ளிட்டவை மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளிகளுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெறும் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீன நகரின் பெய்ஜிங்கில் 51 பேருக்கு புதிதாக கொரோனா கொரோனா தொற்று பரவி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.