‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரீ இவர் தான்? இணையத்தில் கசிந்த தகவல்!
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது வைல்ட் கார்டு என்ட்ரீயாக முன்னாள் போட்டியாளர் அபிஷேக் நுழைந்திருக்கும் நிலையில், இவரை தொடர்ந்து பிரபல டான்ஸ் அகாடமியில் இருந்து ஒருவர் என்ட்ரீ கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வைல்ட் கார்ட்டு
ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சற்று தாமதமாக கடந்த மாதம் முதல் துவங்கப்பட்டது. அந்த வகையில் வழக்கமான எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பித்த ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் இடம்பிடித்திருந்தனர். ஆனால் நிகழ்ச்சி துவங்கிய முதல் வாரத்தில் திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து சில தனிப்பட்ட காரணங்களுக்காக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிட்டோர் கவனத்திற்கு – பக்தர்கள் வருகைக்கான தடை நீக்கம்!
இவரை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்கிடையில் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி தற்போது 50வது நாளை எட்டி இருக்கும் நிலையில், வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக முன்னாள் போட்டியாளர் அபிஷேக் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். ஏற்கனவே ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் நடைபெற்ற ஏகப்பட்ட குழப்பங்களுக்கு காரணமாக இருந்த போட்டியாளர் அபிஷேக் இந்நிகழ்ச்சியில் மீண்டும் இணைந்திருப்பதால் அடுத்து பல ஸ்வாரசியமான சம்பவங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பொது இடங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி கட்டாயம் – அரசு முக்கிய உத்தரவு!
இதற்கிடையில் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இன்னொரு வைல்ட் கார்டு என்ட்ரீயாக ஒரு டான்ஸ் அகாடமி பிரபலம் நுழைய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதாவது அபிஷேக்கை தொடர்ந்து ‘பிக்பாஸ்’ சீஸனின் இரண்டாவது வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக ADS Dance Academy யின் பிரபலம் அமீர் இருப்பார் என சொல்லப்பட்டு வருகிறது. என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.