TNPSC Group 2 & 2A தேர்வு வெளியீட்டில் தாமதம் இதற்காக தான்? முழு விளக்கம்!
தமிழகத்தில் கடந்த மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்ற TNPSC குரூப் 2, 2A ன் முதல் நிலைத்தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் தாமதத்திற்கான காரணம் வெளியாகி உள்ளது.
குரூப் 2 தேர்வு முடிவுகள்:
தமிழக அரசு துறையில் காலியாக உள்ள வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2,2A தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 5529 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 9.94 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவடைந்ததை அடுத்து முதல் நிலை தேர்வின் விடைக்குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் தேர்வின் முடிவுகள் வெளியாகும் என்று தகவல்கள் வந்தது. ஆனால் தற்போது செப்டம்பர் மாதம் தொடங்கி விட்டது. தற்போது வரை TNPSC குரூப் 2, 2A தேர்வு முடிவு இன்னும் வெளியாகவில்லை. அதனால் தேர்வர்கள் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். குரூப் 2 முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மைத் தேர்வு எழுத முடியும் என்பதால் முதன்மை தேர்வுக்கு தயாராக உள்ளவர்கள் தேர்வு முடிவை எதிர்பார்த்து வருகின்றனர்.
லட்சுமிக்கு சாப்பாடு ஊட்டும் பாரதி, மகிழ்ச்சியில் கண்ணம்மா – பாரதி கண்ணம்மா அதிரடி திருப்பம்!
இந்த நிலையில் பெண்களுக்கான 30% இடஒதுக்கீடு முறை தொடர்பாக நடந்து வரும் வழக்கு காரணமாக குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவு தாமதமாவதாக கூறுகின்றனர். மேலும் செப்டம்பர் மாதத்தில் இந்த இட ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதனால் இந்த மாதத்தின் இறுதியில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்