பிரதமரின் PM கிசான் திட்டம்… 12-வது தவணைத்தொகை பெற இதை கட்டாயம் செய்ய வேண்டும்… முக்கிய அறிவுரை!

0
பிரதமரின் PM கிசான் திட்டம்... 12-வது தவணைத்தொகை பெற இதை கட்டாயம் செய்ய வேண்டும்... முக்கிய அறிவுரை!
பிரதமரின் PM கிசான் திட்டம்... 12-வது தவணைத்தொகை பெற இதை கட்டாயம் செய்ய வேண்டும்... முக்கிய அறிவுரை!
பிரதமரின் PM கிசான் திட்டம்… 12-வது தவணைத்தொகை பெற இதை கட்டாயம் செய்ய வேண்டும்… முக்கிய அறிவுரை!

இந்தியாவில் விவசாயிகளுக்கான பிரதமரின் பிஎம் கிசான் திட்டம் மூலம் ரூ. 2000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தற்போது 12-வது தவணைத்தொகை வழங்கப்படவுள்ளது. இதனை பெற விரும்புபவர்கள் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் குறித்து தமிழகத்தின் விழுப்புர மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

கிசான் திட்டம்:

இந்தியாவில் வேளாண் தொழிலையும் விவசாயிகளின் நலனையும் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் புதிய நல திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. அந்த வகையில் விவசாயிகள் வேளாண் பொருட்களை வாங்கும் பொருட்டு கிசான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் தகுதி பெற்ற விவசாயிகளுக்கு ரூபாய் 2000 வீதம் ஒரு ஆண்டில் 3 கட்டங்களாக அதாவது 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் நிதிப்பணம் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஏராளமான விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். தற்போது வரை கிசான் திட்டத்தில் 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் 12-வது தவணைத் தொகை வழங்கபடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும். மேலும் தங்கள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்து பிரதமரின் கிசான் திட்ட இணையதளத்தில் சென்று விவரங்களை சரி செய்து கொள்ள வேண்டும் என்று விழுப்புர மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

காவல் துறையில் பணியாற்றுவது உங்களின் கனவா? உங்களுக்கான அருமையான வாய்ப்பு!!

Exams Daily Mobile App Download

இதுவரை ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ – சேவை மையங்கள் வாயிலாக உடனடியாக இணைக்க வேண்டும். இல்லையெனில் கிசான் திட்டத்தின் 12 – வது தவணைத்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். அதனால் மேற்சொன்ன நடைமுறைகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 1,08,121 விவசாயிகள் மட்டுமே ஆதார் விவரங்களை பிரதமரின் கிசான் திட்ட இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!