வாகன ஓட்டிகளுக்கு இது கட்டாயம்.. மத்திய அமைச்சர் அதிரடி உத்தரவு! மீறினால் அபராதம்!
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மத்திய அமைச்சர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சீட் பெல்ட்:
இந்தியாவில் வாகன விபத்துகளை தடுக்க பல்வேறு சட்டங்களை போக்குவரத்துறை விதித்து வருகிறது. ஆனாலும் மக்கள் சாலை விதிகளை பின்பற்றாமல் அலட்சியம் காண்பிக்கின்றனர். இதனால் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கிறது. இந்தியாவில் சாலை விபத்துகளில் நான்கு நிமிடங்களுக்கு ஒருவர் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தகவல் தெரிவிக்கிறது. அண்மையில் டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி அவர்கள் குஜராத் மாநிலம் உத்வாடாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு காரில் சென்று கொண்டிருந்த போது இடையில் பால்கர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தினால் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் காரில் சென்ற போது பின் இருக்கையில் அமர்ந்திருந்தார் அப்போது அவர் சீட் பெல்ட் அணியவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சீட் பெல்ட் அணியாததே உயிரிழப்புக்கு காரணம் என்கின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காரின் பின்புறம் அமர்ந்து பயணிக்கும் நபரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த விதியை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
அதிகரிக்கும் ஃப்ளூ காய்ச்சல் – பள்ளி விடுமுறை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்!
Exams Daily Mobile App Download
இது தொடர்பான கருத்துக்களை மக்கள் அக்டோபர் 5ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் சீட் பெல்ட் அணிவதற்கான அலாரத்தை கட்டாயமாக வாகனங்களில் பொருத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவில் காரில் பயணிப்பவர்கள் அனைவரும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் இதை பெரும்பாலானோர் பின்பற்றுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்