தமிழகத்தில் அரசுப்பணியில் தேர்வு செய்யப்படுவோருக்கு ‘இது’ கட்டாயம் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வை கட்டாயப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி தமிழ்நாட்டில் அரசு பணி புரிவோருக்கு நிச்சயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அமைச்சர் பொன்முடி பேட்டி
தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் Group III மற்றும் Group IV போன்ற தேர்வுகளில் பொதுத்தமிழ் / பொது ஆங்கிலம் உள்ளதை பொதுத்தமிழ் மட்டும் வைக்கப்பட்டு பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மேலும் வெளிமாநிலத்தவர் தமிழக அரசுப் பணிகளில் சேர்வதையும் கட்டுப்படுத்த முடியும். மேலும் தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும் தமிழக இளைஞர்களுக்கு அதிகமான அளவு பணியிடங்கள் வழங்கப்படும்.
தற்போது பொது ஆங்கிலத்தாள் உள்ளதால் வெளிமாநிலத்தவர்கள் அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர். இதனை தொடர்ந்து மின்வாரியத்தில் அதிக அளவு வெளிமாநிலத்தவர்கள் தான் பணியில் சேர்ந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தற்போது தமிழ்மொழித்தாள் தேர்வில் குறைந்தது 40% மதிப்பெண் வாங்கினால் தான் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அதாவது தமிழ் மொழி தகுதி தேர்வானது 100 மதிப்பெண்கள் கொண்டதாக அமைக்கப்படும்.
தமிழகம் வந்த சிங்கப்பூர் பயணிக்கு ஓமைக்ரான் தொற்று? அச்சத்தில் மக்கள்!!
இத்தகுதித்தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி பெற்ற பிறகு முதன்மை எழுத்துத் தேர்வின் இதர போட்டித் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்ய முடியும். அத்துடன் தமிழ்நாட்டில் அரசு பணியில் சேருபவர்களுக்கு கட்டாயமான முறையில் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு பணியில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் குறைகளை கேட்பதற்கு தமிழ் கட்டாயமான முறையில் தெரிந்திருக்க வேண்டும். ஆதலால் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் இளைஞர்கள் இதுவரை தமிழை கற்கவில்லை என்றால் தமிழை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.