பள்ளிகளில் இந்த வகுப்பு இனி கட்டாயம்.. மாணவர்களுக்கு அப்போ ஜாலி தான் – அரசின் புதிய திட்டம்!
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விரைவில் யோகா கட்டாயமாக்கப்படும். இந்தக் உத்தரவு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய வகுப்பு:
உத்தரபிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு யோகா கட்டாயமாக்கப்படும் என்ற உத்தரவு விரைவில் அமலாக உள்ளது. விளையாட்டு கலாச்சாரத்தை வளர்ப்பது, விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் மாநிலத்தின் கடைக்கோடி பகுதியிலும் உள்ள விளையாட்டு மீது ஆர்வம் உள்ள மாணவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலர் நவ்நீத் சேகல் இதுபற்றி, ‘5 முதல் 14 வயது வரை உள்ள திறமை வாய்ந்த குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் ஆர்வம் மற்றும் விளையாட்டில் கலந்து கொள்ளும் பங்களிப்பு திறனை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளது. மேலும்,லக்னோவிலுள்ள குரு கோவிந்த் சிங் விளையாட்டுக் கல்லூரியை மூன்று விளையாட்டுகளுக்கான சிறப்பு மையமாக (CoE) மேம்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த கல்லூரிகளில் விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு இதழியல், விளையாட்டு சட்டம், விளையாட்டு தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட படிப்புகள் இளைஞர்களுக்காக நடத்தப்படும்’ என்று கூறியுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் – பள்ளிக்கல்வி துறை உத்தரவு!
Exams Daily Mobile App Download
மேலும் அவர் கூறியதாவது, ‘தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கு ஒவ்வொரு விளையாட்டிலிருந்தும் 20 சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க இந்த கல்லூரிகள் உறுதுணையாக இருக்கும். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட விளையாட்டு மையம் அமைத்து இளம் திறமைசாலிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்’ என்றும் கூறியுள்ளார். மேலும், ‘அனைத்து மாவட்ட தலைமையகங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்களில் யோகா பயிற்சி மற்றும் பயிற்சிக்கான வசதிகள் வழங்கப்படும். உத்தரப்பிரதேச விளையாட்டு மேம்பாட்டு நிதியாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ எனவும் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்