திருவண்ணாமலை தீபத் திருவிழா… 22 லட்சம் பேருக்கு அன்னதானம் – ஆணை இல்லாமல் வழங்க தடை!!
திருவண்ணாமலை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல வகையான அமைப்புகள் சார்பாக அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முக்கிய எச்சரிக்கை ஒன்றை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ளார்.
அன்னதானம்
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவானது ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று தீபத் திருவிழா கொண்டாட உள்ளது. அதன்படி நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீப திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இவ்விழாவில் லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் கலந்து கொள்வார்கள்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதனால் விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பல தொண்டு நிறுவனங்களும் மற்றும் பலவகையான அமைப்புகளும் அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் வரவிருக்கும் டிசம்பரில் 6ம் தேதி அன்று தீப திருவிழாவை முன்னிட்டு 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்க இருப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் அன்னதானம் வழங்க உரிய ஆணைகளை மாவட்ட ஆட்சியரிடம் பெற வேண்டும்.
பொங்கல் தொகுப்பு 2023.. தமிழக அரசின் புதிய திட்டம் – மக்களுக்காக வெளியாக இருக்கும் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இதுவரை மாவட்ட ஆட்சியாளரால் இந்த நகரில் 112 பேருக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதே போல் 154 பேருக்கு கிரிவலபாதையில் அன்னதானம் வழங்குவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். இந்த நியமன ஆணைகளை பெற்றுள்ளவர்கள் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் எனவும் நியமன ஆணைகளின்றி அன்னதானம் வழங்கக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார் .