திருவண்ணாமலை தீப திருவிழா 2022 – 4 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு!
திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் டிசம்பர் 6ம் தேதி தீப திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
சிறப்பு ரயில்:
தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீப திருவிழா வரும் 6ம் தேதி விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண நடப்பு ஆண்டு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தர உள்ளார். இதையடுத்து கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
கடந்த இரண்டு வருடம் கொரோனா தாக்கத்தால் தீப திருவிழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நடப்பு ஆண்டு இயல்பு நிலை திரும்பியுள்ளதால் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் தற்காலிக பேருந்து நிறுத்தங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து கோவில்களிலும் செல்போன்களுக்கு தடை – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து தற்போது தென்னக ரயில்வே சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி முதல் 8ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு 24 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. வரும் 6,7ம் தேதிகளில் மயிலாடுதுறை திருவண்ணாமலை வரை 4 சிறப்பு ரயில்களும், டிச.6,7ம் தேதிகளில் திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் என மொத்தம் 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.