தமிழக பேருந்துகளில் மீண்டும் இடம்பெறும் திருவள்ளுவர் புகைப்படம்? முதல்வர் ஆலோசனை!
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் முடங்கியுள்ள பொது போக்குவரத்துக்கு சேவைகளை மீண்டும் துவங்குவது குறித்தும் அதில் திருவள்ளுவர் புகைப்படங்களை இணைப்பது குறித்தும் முதல்வர் முக ஸ்டாலின், போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜா கண்ணப்பனுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
பேருந்து சேவைகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலியாக மே மாதம் 10 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் வீதம் குறைந்து வருவதால் 2 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூன் 18 ஆம் தேதியுடன் முடிவடையும் முழு ஊரடங்கிற்கு பின்னாக, போக்குவரத்து இயக்கத்திற்கு அனுமதி கொடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தொழில் கல்வி படிப்புகள் சேர்க்கை – ஆய்வு மையம் அமைக்க உத்தரவு !!
இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜா கண்ணப்பனுடன், முதல்வர் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் பேருந்து சேவைகள் மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து மாநகர, நகர பேருந்துகளை பழுது பார்க்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி? முக்கிய தகவல் வெளியீடு!
அதன் படி தமிழகத்தில் மீண்டுமாக துவங்க உள்ள பேருந்து சேவையில், பேருந்துகளின் இயக்க விதிமுறைகள், OSP உள்ளிட்டவை குறித்து ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழக அரசு பேருந்துகளில் திருவள்ளுவரின் புகைப்படம், திருக்குறள் உள்ளிட்டவை இடம்பெறவும் அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் புதிய பேருந்துகள், நவீன வசதியுடைய பேருந்துகளை இயக்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல்வர் ஆலோசனை!