தமிழக அரசில் ரூ.35,100/- ஊதியத்தில் வேலை – கிராம உதவியாளர் பணியிடங்கள்..!
திருவள்ளூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்போது கிராம உதவியாளர் பணிக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாக புதிய அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Village Assistant பணிக்கு தற்போது தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு தேவையான முழு விவரங்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Tiruvallur Poonamallee Taluk Office |
பணியின் பெயர் | Village Assistant |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
வட்டாட்சியர் அலுவலக காலிப்பணியிடங்கள்:
வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், தற்போது காலியாக உள்ள Village Assistant பணிக்கு என்று இரண்டு காலி இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Village Assistant கல்வித் தகுதி:
கிராம உதவியாளர் பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 5ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre
வட்டாட்சியர் அலுவலக வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 01-01-2022 தினத்தின் படி 21 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் பணிக்கான வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
கிராம உதவியாளர் ஊதியம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.11,100/- முதல் அதிகபட்சம் ரூ.35,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Village Assistant தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
கிராம உதவியாளர் விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்புடன் இணைத்துள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து தொடர்புடைய வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் அலுவலர் அவர்களுக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம். இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 20.01.2022 அறிவிக்கப்பட்டுள்ளது.