திருச்செந்தூரில் நாளை (பிப்.05) தைப்பூச திருவிழா – இந்த ஆடைகளை அணிய பக்தர்களுக்கு தடை!!
திருச்செந்தூர் கோவிலில் நாளை (05.02.2023) தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆடை கட்டுப்பாடு:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 2023 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழா நாளை (பிப்.5) நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு தற்போது கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தன்று சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
அரசு கொடுத்த டிராஃபிக் ஆஃபரால் ரூ. 5.6 கோடி அபராதம் வசூல் – கர்நாடகா அரசு அறிவிப்பு!!
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் காவல்துறை பக்தர்களுக்கு சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதாவது சாலையில் நடந்து வரும் பக்தர்கள் எப்போதும் வலது புறமாக நடந்து செல்ல வேண்டும். மேலும் கோயிலுக்குள் பக்தர்கள் சாதி ரீதியான அடையாளங்கள் அச்சிடப்பட்ட உடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சர்ப்பக் காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவுகளை மீறினால் அந்த நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் சுமார் 600 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.