நாளைக்கு 6 மணி நேரம் கரண்ட் இருக்காது – தமிழகத்தில் அக்.01 பவர் கட் ஏரியா!
மதுரை மாவட்டத்தில் சில துணை மின் நிலையங்களில் அக்டோபர் 1ம் தேதி (நாளை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை :
தமிழகத்தில் மின் பயனர்களுக்கு சீரான மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் தவறாது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது மின் விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவை கண்டறியப்பட்டு சரி செய்யப்படுகிறது. மேலும் மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பும் செய்யப்படும். இதனை அறிந்து பயனர்கள் மின் உதவியுடன் செய்யப்படும் வேலைகளை முன்னதாகவே முடித்து விடுகின்றனர். மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை (அக்.1) மதுரை மாவட்டத்தில் சமயநல்லூர், வாடிப்பட்டி, அரசரடி ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நாளை (அக்.1) பவர் கட் செய்யப்படும் பகுதிகள் – மக்களின் கவனத்திற்கு!!
Exams Daily Mobile App Download
அதனால் பரவை, பேங்க் காலனி, ஆகாஷ் கிளப், சரவணா நகர், வித்யாவாகினி அபார்ட்மெண்ட், கூலாண்டிப்பட்டி,எல்லையூர், தடாகநாச்சிபுரம், ராமராஜபுரம், செமினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன் கோட்டை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். அதே போல கொன்னவாயன் சாலை, இந்திரா நகர், மேல மற்றும் கீழவைத்தியநாதபுரம், சிங்கம்பிடாரி கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்