தமிழகத்தில் நாளை (அக்.07) இந்த இடங்களில் கரண்ட் இருக்காது – தயாராக இருங்க மக்களே!
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (அக்.07) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு குறிப்பிட்ட நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மின்வாரியம் முன்னதாக அறிவித்து வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரங்கள் அவற்றின் மர கிளைகள் வெட்டப்படுகிறது.
அதனை தொடர்ந்து சேதமடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், பழுதான மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகளும் நடந்து வருகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் மற்றும் மின் பயனர்களின் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மின்சாரத்திற்கு 50% மானியம் – அரசின் புதிய திட்டம் அறிமுகம்!
Exams Daily Mobile App Download
அதனால் கே.சேவல்பட்டி, கலெக்டர் அலுவலக வளாகம், கூரைக்குண்டு, ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, மாத்தி நாயக்கன்பட்டி, சூலக்கரை, அழகாபுரி, மீசலூர், தாதம்பட்டி, , தொழிற்பேட்டை ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அக்டோபர் 7ம் தேதி ( வெள்ளிக்கிழமை) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்