தமிழகத்தில் அக்.06-ம் தேதி இந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது! அலர்டா இருங்க!
தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி பகுதி துணை மின் நிலையத்தில் (அக். 06) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் தற்போது வீடுகளுக்கான மின்சார கட்டணம் 12 %முதல் 52 % வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மின் கட்டணம் மூலம் மின் வாரியத்துக்கு ரூ.59,435 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மத்தியில் தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இந்த வருஷம் தீபாவளியை சூப்பரா கொண்டாடலாம்!!
இதனை முன்னிட்டு மின்வாரியம் முன்னதாக மின்தடை செய்ய இருக்கும் பகுதிகளின் பட்டியலை அறிவித்து விடுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் அப்பகுதி தொழிலகங்களில் தங்கள் பணிகளை முன்னதாக திட்டமிட்டு செய்து வருகின்றனர். இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரங்கள் மற்றும் மர கிளைகள் அகற்றப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் மற்றும் மின் பயனர்களின் பாதுகாப்பு கருதி பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதனால் பி. அணைக்கரைப்பட்டி, பி.மீனாட்சிபுரம், குரங்கனி, போடி ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்