மக்களே எச்சரிக்கை!! தமிழகத்தில் அக்.06-ம் தேதி இந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது!
வரும் அக். 06 அன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மின்வாரியம் முன்னதாக மின்தடை செய்ய இருக்கும் பகுதிகளின் பட்டியலை அறிவித்து விடுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் பணிகளை முன்னதாக திட்டமிட்டு செய்து வருகின்றனர். இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரங்கள் மற்றும் மர கிளைகள் அகற்றப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் மற்றும் மின் பயனர்களின் பாதுகாப்பு கருதி பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காலாண்டு விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள்? பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்!
Exams Daily Mobile App Download
அதனால் காரைக்குடி துணை மின் நிலையத்திற்குட்பட்ட கல்லூரி சாலை, கல்லுக்கட்டி, பேயன்பட்டி, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு (ஹவுசிங் போர்டு), செக்காலைக்கோட்டை, பாரி நகர், செக்காலை சாலை, புதிய, பழைய பேருந்து நிலையம், கோவிலூர் சாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று அப்பகுதி செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்