தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை கிடையாது – வெளியான அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. இதையடுத்து தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிந்த பிறகு வழக்கமான விடுமுறை நாட்கள் வழங்கப்படாது என கல்வி அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
விடுமுறை நாட்கள்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்பு கொரோனா பரவல் ஊரடங்கு கட்டுப்பாடு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் காரணமாக தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது. அதன்படி தற்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியுள்ளது. அத்துடன் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 26 முதல் 30ம் தேதி வரையும் மற்றும் 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு 23 முதல் 30ம் தேதி வரையும் காலாண்டுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது தேர்வுக்குரிய முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 127 பேருக்கு அண்ணா பதக்கங்கள் – முதல்வர் ஆணை!
Exams Daily Mobile App Download
பொதுவாக காலாண்டு தேர்வு முடிந்ததும் வழக்கமான முறையில் 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் வழக்கமான விடுமுறை நாட்கள் அளிக்கப்படாது என கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்டவைகளுக்காக அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதன்பின்பு வழக்கம் போல அக்டோபர் 6ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் எனவும் கூறியுள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்