தமிழக பள்ளிகளில் இனி வேலைவாய்ப்பு பதிவு முறை கிடையாது – அரசு திடீர் அறிவிப்பு!
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இனி பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்து கொடுக்கப்பட மாட்டாது எனவும், இ – சேவை மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பதிவு:
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதும் மாணவர்களின் சான்றிதழ்கள் அந்த மாணவர் பயின்ற பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொடுக்கப்படுகிறது. ஆனால், தற்போது மாணவர்கள் படித்த பள்ளிகளிலேயே பதிவு செய்யும் முறை கைவிடப்பட்டுள்ளதாக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று வேலைவாய்ப்பு பதிவு செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர் தேர்ச்சி பெற்றதுமே மாணவர் மதிப்பெண் சான்றிதழ்களுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கும்படி அறிவுரைகள் வழங்கப்படுகிறது. மேலும், மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு செய்து பதிவேடு வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் வழியாகவும் மாணவர் எளிமையாக வேலைவாய்ப்பு பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.25,000/-
அதாவது, மாணவர் www.tnvelaivaaippu.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று மாணவர்கள் நேரடியாக வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு பதிவு, கூடுதல் பதிவுகள் மற்றும் வேலைவாய்ப்பு பதிவுகளை புதுப்பிக்க வேண்டுமென்றாலும் அருகிலுள்ள இ – சேவை மையங்கள் வழியாக செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பள்ளிகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.