RRB தேர்வுகளில் முறைகேடுகள் இல்லை – ரயில்வே வாரியம் எச்சரிக்கை!
ரயில்வே வாரியத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடுகள் ஏதும் இல்லை என்று மத்திய ரயில்வே துறை தேர்வர்களை எச்சரித்துள்ளது. மேலும், போலியான செய்திகளை பற்றியும் தெரிவித்துள்ளது.
RRB தேர்வு:
நாடு முழுவதும் படித்த இளைஞர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அதிலும் அரசு துறை பணிக்கான கனவுகளுடன் இருப்பவர்கள் ஏராளமானவர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று தாக்கத்தின் காரணமாக அரசு துறைகளில் உள்ள காலியிடங்களுக்கான தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. இதனால் அரசு துறைகளில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் தான் தொற்றின் தீவிரம் குறைந்திருப்பதால், அரசு பணிகளுக்கான தேர்வுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அரசு பணி நியமனங்களில் மிகவும் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் பணி நியமனங்களில் முறைகேடுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு முக்கிய அறிவுறுத்தல் – அமைச்சர் அறிக்கை!
Exams Daily Mobile App Download
ஆனாலும் சிலர் அரசு துறைகளில் வேலை பெற்றுத் தருவதாக மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களும் உண்மை நிலை தெரியாமல் மோசடிக்காரர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து விடுகின்றனர். இந்நிலையில், ரயில்வே பணிகளுக்கான தேர்வுகள் மிகவும் நேர்மையாக நடைபெற்றதாகவும், சமூக வலைத்தளங்களில் குறுக்கு வழியில் வேலை வாங்கி தருவதாக வரும் செய்திகளை தேர்வர்கள் நம்ப வேண்டாம் என்று ரயில்வே வாரியம் எச்சரித்துள்ளது. மேலும், செப்டம்பர் 19ம் தேதி அன்று நடந்த தேர்வில் முறைகேடாக நடந்து கொண்ட 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்