இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பரவும் அச்சம் – மாநில அரசுகளுக்கு கடிதம்!
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும் கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பரவல்:
இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் மீண்டு விட்டனர் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16,047 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் 54 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
நேற்று ஒரே நாளில் மட்டும் 15,21,429 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 2,07,03,71,204 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இந்த நிலையில் டெல்லி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய 7 மாநிலங்களில் வரவிருக்கும் பண்டிகை காலங்களை முன்னிட்டு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். அதில் பண்டிகை காலங்களில் பெருமளவில் மக்கள் கூட்டம் கூடுவர். அதனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வங்கிகளுக்கு இந்த வாரத்தில் மட்டும் 5 நாட்கள் விடுமுறை – முக்கிய தகவல் வெளியீடு!
அத்துடன் தற்போது பருவ காலம் என்பதால் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இத்தகைய காலத்தில் உணவு மற்றும் நீர் சார்ந்த தொற்றுகள் பரவும். அதனால் பொதுமக்கள் பண்டிகைகளை வீட்டில் இருந்து குடும்பத்தினர்களுடன் கொண்டாட மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். அதனை தொடர்ந்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றுவதை ஊக்கப்படுத்த வேண்டும். சமூக இடைவெளி மற்றும் முகக் கவசங்களை அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றும் படியும் அறிவுறுத்தப்படுகிறது.