தொடங்கிய சில நாட்களில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோ – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில், புதிதாக தொடங்கப்பட்டு 11 எபிசோடுகள் மட்டுமே முடிந்துள்ள ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்று முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரியாலிட்டி நிகழ்ச்சி
தமிழ் சின்னத்திரையில் முன்னணி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் புது கன்டென்ட் உடன் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சென்ற ஆண்டு நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், தன்னுடைய நக்கல் நையாண்டி பேச்சால் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த ராஜு ஜெயமோகனை வைத்து புதிதாக “ராஜு வூட்டுல பார்ட்டி” நிகழ்ச்சி ஒன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் சீரியல் நடிகர்கள் கலந்து கொண்ட நிலையில், அதன் பின் பல பிரபலங்கள் வந்தனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிகழ்ச்சி நல்ல ஒரு காமெடி நிகழ்ச்சியாக இருந்த நிலையில், இதுவரை 11 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்நிலையில் வருகிற அக். 9 ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட இருப்பதால் ராஜு வூட்டுல பார்ட்டி நிகழ்ச்சி முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த பதிவு ஒன்றை ராஜு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இந்த நிகழ்ச்சியை ரசிக்கும் படியாக அமைத்து கொடுத்த கலைஞர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
ராதிகா கழுத்தில் தாலி கட்ட போகும் கோபி – பரபரப்பான காட்சிகளுடன் “பாக்கியலட்சுமி”!
நிகழ்ச்சி முடிந்த கையோடு அவர் தனது மனைவி உடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அது குறித்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. மேலும் அவர் இனி சின்னத்திரைக்கு வரமாட்டார் எனவும், இனி வெள்ளித் திரையில் அவரை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடைய நீண்ட நாள் கனவான வெள்ளித்திரையில் நடிக்க அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் தொடங்கப்பட்ட சில நாட்களில் இந்த நிகழ்ச்சி முடிவதால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர்.