TNPSC Group 4 தோ்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – விண்ணப்பிக்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படாத போட்டி தேர்வுகள் அனைத்தும் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை சமீபத்தில் வெளியான நிலையில் இன்னும் 10 நாட்களே கால அவகாசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4:
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான பணியாளர்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வருடம் வெளியான வருடாந்திர தேர்வு கால அட்டவணை மூலம் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு முன்கூட்டியே தங்களை தயார்படுத்தி வருகின்றனர். மேலும் இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்புகள் ஒன்று ஒன்றாக வெளியாகி இருக்கிறது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்பட மொத்தமாக 7 ஆயிரத்து 138 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பு மாா்ச் 30 ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28 கடைசி நாள் ஆகும். இன்னும் 11 நாட்கள் மட்டுமே இருக்கிறது என்பதால் குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க தோ்வா்கள் அதிகளவு ஆா்வம் காட்டி வருகின்றனா். இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்ட தோ்வா்கள் விண்ணப்பம் செய்துள்ளனா்.
பாக்கியா சிறையிலிருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராதிகாவுடன் இணையும் கோபி – வைரலாகும் ப்ரோமோ !
எழுத்துத் தோ்வானது ஜூலை 24-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 வரை நடைபெறுகிறது. 15 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வுக்கு விண்ணப்பம் செய்யலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் அடங்கியுள்ள தாலுகாக்களை தோ்வு மையங்களாக தோ்வாணையம் அறிவித்துள்ளது. செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்களில் அதிகபட்சமாக 8 வட்டங்களும், மயிலாடுதுறை, திருப்பத்தூரில் குறைந்தபட்சமாக 4 வட்டங்களும் தோ்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால் தேர்வர்கள் விரைந்து விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.