“தென்றல் வந்து என்னை தொடும்” சீரியலில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு காட்சிகள் – கலாய்க்கும் நெட்டிசன்கள்!
விஜய் டிவி “தென்றல் வந்து என்னை தொடும்” சீரியல் பல அதிரடி காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், சீரியலில் வரும் காட்சிகள் திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு இருப்பதால் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்:
சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்கள் என்றாலே அது சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இருக்கும். அந்த வகையில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் “தென்றல் வந்து என்னை தொடும்” சீரியல். இந்த சீரியல் குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் அதுவே பல சர்ச்சைகளை கொண்டு வரும் அளவிற்கு இருந்தது. காரணம் கதை தான். இந்த சீரியல் ஹீரோ ஒரு ரௌடி. மேலும் ஹீரோயின் அமெரிக்காவில் படித்துவிட்டு வந்தவர். அவரை பற்றி தெரியாமல் திடீரென ஒரு விபத்தில் கதாநாயகி கழுத்தில் ஹீரோ தாலி கட்ட அவரை முழு மனதுடன் கணவராக ஏற்றுக் கொள்கிறார்.
விஜய் டிவியில் ஜோதிகா நடிப்பில் “நம்ம வீட்டு மாப்பிள்ளை” என்ற புதிய சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!
இந்நிலையில் கதையில் அதிரடி திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. வெற்றி ஒரு அரசியல் பிரமுகர் ஒருவரின் மகனை கொலைவெறியோடு தாக்கியுள்ளார். அதனால் வெற்றியை நீதிமன்றத்தில் நிறுத்துகின்றனர். அபிநயா தனது கணவர் என பார்க்காமல் சாட்சி சொல்கிறார். ஆனால் வெற்றி மீது தவறு இல்லை என்பதை புரிந்து கொண்ட அபிநயாவின் தந்தை வெற்றிக்கு ஆதரவாக போராடி அவரை காப்பாற்றுகிறார். இதனால் அந்த அரசியல்வாதி அபிநயாவை கடத்தி விடுகிறார். அபிநயாவை காப்பாற்றுவதற்காக வெற்றி எடுக்கும் முயற்சிகள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு வருகிறது.
‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபியை நடுரோட்டில் திட்டிய ரசிகைகள் – பாக்கியாவிற்கு பெருகும் ஆதரவு!
அபிநயா மற்றும் வெற்றி இருவரின் கைகளையும் கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் நிலையில் அபிநயாவின் கையிலிருக்கும் வளையலால் அந்த கயிறை அறுத்து அபிநயா மற்றும் வெற்றி இருவரும் அங்கிருந்து தப்பிக்கின்றனர். வெற்றியும் அபிநயாவும் புதருக்குள் ஒளிந்திருக்கும் போது அங்கே ரவுடி ஒருவன் கத்தியை வைத்து குத்தும்போது வெற்றி கையால் அதை பிடித்து விடுகிறார். வெற்றி கை வெட்டு பட்டு அந்த கத்தியில் இரத்தம் ஒட்டிக் கொண்டதும், அதை அபிநயா தனது புடவையால் துடைத்து விடுகிறார். இந்த சீன்கள் எல்லாம் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இருப்பதால் நெட்டிசன்கள் பலர் கலாய்த்து வருகின்றனர்.