ஜூலை 19 முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி – ஊரடங்கு தளர்வுகள்!
கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு கர்நாடகா மாநில அரசு ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்க உள்ளது. அதன்படி ஜூலை 19 முதல் தியேட்டர்கள், கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஊரடங்கு தளர்வுகள்:
COVID-19 நிலைமை படிப்படியாக மேம்படுவதால் கர்நாடக முதலமைச்சர் முழு மாநிலத்திற்கும் ஊரடங்கு விதிகளில் மேலும் தளர்வுகளை அறிவித்து உள்ளார். புதிய தளர்வுகளில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி 50% திறனுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்படும். இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரிகள் ஜூலை 26 முதல் திறக்க அனுமதிக்கப்படும். மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ஏதேனும் ஒரு கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் செலுத்தி இருந்தால் மட்டுமே நேரடி வகுப்புகளுக்கு கல்லூரிகளுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.
Indane நிறுவன LPG சிலிண்டர் பயனர்கள் கவனத்திற்கு – புதிய அறிமுகம்!
மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவை ஒரு மணி நேரமும் அரசாங்கம் தளர்த்தியுள்ளது, இப்போது இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும். இந்த தளர்வுகள் ஜூலை 19 முதல் நடைமுறைக்கு வரும். முதலமைச்சர் தலைமையில் உயர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவுகளை அறிவிக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவு இன்னும் வெளியிடப்படவில்லை.
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
இதற்கிடையில், கொரோனா மூன்றாவது அலைக்கான முன்னேற்பாடுகளில் மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு பயிற்சி அளிப்பதாக அரசாங்கம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 3வது அலை குழந்தைகளை தாக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ள நிலையில், பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகள் தொடங்குவது மேலும் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.