ஆந்திராவில் ஜூலை 8 முதல் தியேட்டர்கள், ரெஸ்டாரன்ட்கள் திறப்பு – முழு ஊரடங்கு தளர்வுகள்!
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் 8 ஆம் தேதி முதல் திரையங்குகள் மீண்டுமாக செயல்பட உள்ளன.
ஊரடங்கு தளர்வுகள்
கொரோனா 2 ஆம் அலை பரவலால் ஆந்திர பிரதேசத்தில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதாவது ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு விகிதம் தொடர்ந்து ஐந்து சதவீதமாக பதிவாகி வருவதால், தினசரி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 11 மாவட்டங்களில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
ஜூலை 19 முதல் முகக்கவசம் அணிய தேவையில்லை – இங்கிலாந்து அரசு!
அந்த வகையில் குறிப்பிடப்பட்ட 11 மாவட்டங்களில், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், கோதாவரி மாவட்டங்களில் மாலை 6 மணி வரையிலும் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தளர்வுகள் ஜூலை 8 முதல் நடைமுறைக்கு வரும் என்று முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான உயர்மட்ட குழுவின் மறு ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளில் அனைத்து நிறுவனங்களும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர சினிமா அரங்குகள், ரெஸ்டாரன்ட்கள், ஜிம் மற்றும் திருமண அரங்குகள் ஜூலை 8 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட அளவு திறனுடன் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா புதிய பாதிப்புகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து மே 5 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.