பாக்கியாவும் கோபியும் இருக்கும் புகைப்படத்தை ராதிகாவிற்கு அனுப்பும் தனம் – சீரியலில் புதிய திருப்பம்!
கோபியின் குடும்பத்தில் உள்ளவர்களின் புகைப்படத்தை காட்டினால் தான் ராதிகா திருமணம் செய்துகொள்வேன் என கூறுகிறார். இந்நிலையில் ராதிகாவிற்கு தனம் புகைப்படத்தை அனுப்புவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் மனைவி தான் பாக்கியா என்பது ராதிகாவிற்கு எப்போது தான் தெரியவர போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். பிறந்தநாள் விழா முடிந்ததும் ராதிகாவிடம் கோபி பேசுவதை பார்த்து மூர்த்திக்கு சந்தேகம் வருகிறது. சந்தேகத்தை தீர்த்து கொள்வதற்காக தனமும், மூர்த்தியும் ராதிகாவின் வீட்டிற்கு செல்கின்றனர். உங்களது வருங்கால கணவரின் புகைப்படத்தை காட்டுங்கள் என மூர்த்தி கேட்டதும் கோபியின் புகைப்படத்தை எடுத்து காட்டுகிறார். கோபியின் புகைப்படத்தை பார்த்ததும் இருவரும் மிரண்டு போகின்றனர்.
Exams Daily Mobile App Download
பின்பு, இவர் உங்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார். உங்களை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தையும் ஏமாற்றி கொண்டிருக்கிறார். நீங்கள் அவரது குடும்பத்தில் உள்ள யாரின் புகைப்படத்தையாவது பார்த்திருக்கிறீர்களா என கேட்கிறார். புகைப்படத்தை பார்த்த பிறகு அவரை நீங்கள் திருமணம் செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவெடுங்கள் என கூறுகிறார். மூர்த்தி கூறியதும் கோபி மீது ராதிகாவிற்கு கோவம் வருகிறது. மூர்த்தி வீட்டிற்கு வந்ததும் உங்களது குடும்பத்தில் உள்ளவர்களின் புகைப்படத்தை காட்டுங்கள் என கேட்கிறார்.
புதிதாக திருமணம் ஆனவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலமாக சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்பு!
ஆனால், ராதிகாவிடம் கோபி புகைப்படமெல்லாம் காட்ட முடியாது என கூறுகிறார். அப்போ வீட்டை விட்டு வெளியே கிளம்புங்கள் என ராதிகா கோவமாக கூறிவிடுகிறார். எப்படியாவது ராதிகாவிற்காக போலியான குடும்பத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என கோபி நினைக்கிறார். இதற்கு நடுவே தனத்திற்கு ஒரு சந்தேகம் வருகிறது. கண்டிப்பாக இந்த முறையும் கோபி வேறு ஏதேனும் புகைப்படத்தை காட்டி தப்பித்துவிடுவார். இதனால் நாமே கோபியும் பாக்கியாவும் இருக்கும் புகைப்படத்தை ராதிகாவிற்கு அனுப்பிவிடுவோம் என நினைத்து ராதிகாவிற்கு கால் செய்யும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.