நடிகை சமந்தா சமூக வலைத்தளத்தில் செய்த காரியம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் தனது கணவரின் பெயரை நீக்கிவிட்டு வேறு பெயர் மாற்றியுள்ளார்.
சமந்தா
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் அதிகம் என்று கூறலாம். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கு பின்பு தெலுங்கில் வெளியான ‘ஓ பேபி’ திரைப்படம் தமிழிலும் வெளியானது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். அதோடு, சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து ‘சமந்தா அக்கினேனி’ என்று மாற்றி வைத்திருந்தார்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 5 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!
இந்நிலையில், தற்போது சமந்தா அக்கினேனி என்ற பெயரை எடுத்து விட்டு வெறும் ‘S’ என்று தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் மாற்றியிருக்கிறார். ஆனால், சமந்தாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் ‘சமந்தா அக்கினேனி’ என்று மாறாமல் தான் உள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். இவரை டிவிட்டரில் 89 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 78 லட்சம் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர். இன்னிலையில் சமந்தா தனது பெயரை மாற்றியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.