திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்ல திட்டமிட்டோர் கவனத்திற்கு – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
திருப்பதி கோயிலில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன நடைமுறை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போதைக்கு அனுமதி இல்லை என்றும் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிறப்பு தரிசனம்:
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகவும். உலகம் முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருவார்கள். கடந்த ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக கோயிலில் தரிசனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைக் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் ஆகியோருக்கு சிறப்பு தரிசனத்திற்கான அனுமதி வழங்கப்படும்.
3,500 ரூபாயில் JioPhone Next ஸ்மார்ட்போன் நவம்பரில் அறிமுகம் – ஆண்ட்ராய்டு 11 OS & 13 MP கேமரா!
சமீப காலமாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் கோயிலில் தினமும் குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் 27,482 பேர் திருமலையில் தரிசனம் செய்துள்ளனர். 3.73 கோடி ரூபாய் உண்டியலில் வசூலாகியுள்ளது. இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைக் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு தரிசனம் மார்ச் 20ம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்னும் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஆனால் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதனை நம்பி பலரும் திருப்பதிக்கு வருகை புரிகின்றனர். நேரடியாக கோயிலுக்கு பின்னர் விஷயம் அறிந்து பக்தர்கள் வருந்துகின்றனர். எனவே, மூன்று பிரிவினருக்கான சிறப்பு தரிசன முறை மீண்டும் அமலுக்கு வரவில்லை. கொரோனா தொற்று முற்றிலும் குறைந்த பின்னர், இந்த தரிசன வசதியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்படும் என்று தேவஸ்தானம் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Govinda Govinda Govinda