இந்திய அரசியல் கட்சிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல் – உச்சநீதிமன்றம் உத்தரவு!
இந்தியாவில் அரசியல் கட்சியினர் தங்கள் பெயர்களில் மதத்தின் பெயர் மற்றும் சின்னங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இது பல்வேறு வகையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இந்த நிலையில் மத சின்னங்களை பயன்படுத்துவது குறித்து விளக்கம் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள்:
இந்தியாவில் கட்சிகள் தங்களது பெயர்களில் மதம் மற்றும் சின்னங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பல கலவரங்கள் ஏற்படுகிறது இறையாண்மை பாதிப்படைய கூடிய வகையிலான பிரச்சனைகளுக்கு வழிவகுகிறது. மேலும் மக்களாட்சிநடைபெறும் நாட்டில் அது மிகத் தவறானது. இவ்வாறு அரசியல் கட்சிகள் தங்கள் பெயர்களில் மதத்தின் பெயரை பயன்படுத்துவதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சையத் வாசிம் ரிஸ்வி என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் அளித்த மனுவில் பல கட்சிகள் மதத்தின் பெயரையும், அடையாளத்தையும் பயன்படுத்துகின்றன.
இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மதத்தின் பெயரை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முரளி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் கட்சிகள் மதத்தின் பெயர், சின்னங்களை பயன்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோபியின் கல்யாணத்துக்கு எதிராக நிற்கும் இனியா? கோபியின் முடிவு என்ன – பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!
அதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் மதத்தின் பெயரை பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த வழக்கு விசாரணையின் போது அரசியல் கட்சிகள் அறிக்கை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்