நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசின் திடீர் முடிவு!

0
நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் - அரசின் திடீர் முடிவு!
நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் - அரசின் திடீர் முடிவு!
நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசின் திடீர் முடிவு!

கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதை அடுத்து நாடு முழுதும் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு ஊரடங்கு அமல்:

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. மேலும் இந்த தொற்று இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சாங்சுன், ஜிலின், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் வைரஸ் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

சீனாவில் கொரோனா இல்லாத நாடு என்ற கொள்கை திட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு அரசு கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13146 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.. சீனாவில் பதிவாகும் கொரோனா தினசரி பாதிப்பில், ஷாங்காய் நகரில் மட்டும் சுமார் 70 % பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாக சீன அரசு தெரிவித்து உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – இன்று முதல் அரை நாள் மட்டுமே பள்ளிகள் திறப்பு!

ஷாங்காயில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் நகரம் முழுவதும் ஆள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த பொதுமுடக்கம் காரணமாக பெரும் அச்சத்தில் ஷாங்காய் நகர மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இதை அடுத்து பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள சீன அரசு உத்தரவிட்டு உள்ளது. ஒரு சில நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா கட்டுக்கடங்காமல் பரவுவதால், நாடு முழுதும் ஊரடங்கை அமல்படுத்த சீன அரசு முடிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!