பிப்.11 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு, திருமண நிகழ்வுகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் – மாநில அரசு உத்தரவு!
குஜராத் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை நிலவரப்படி, இதற்கு முந்தைய நாட்களை விட சற்று அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று மக்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது குஜராத் அரசு கட்டுப்பாடுகளில் கூடுதல் வரைமுறைகளை அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
குஜராத் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை நிலவரப்படி 8,934 பேருக்கு புதிதாக கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன. மாநில சுகாதார அறிக்கையின் படி, அதற்கு முந்தைய நாளை விட நோய்த்தொற்று பாதிப்புகள் சற்று அதிகரித்துள்ளன. இதுவரை குஜராத்தில் பதிவான மொத்த கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி 11,77,931 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று முன்னதாக மத்திய சுகாதார அமைச்சகம், குஜராத்மற்றும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கிடையில், கோவிட் -19 நேர்மறை விகிதம் மற்றும் தினசரி வழக்குகளில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருவதை பதிவு செய்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் கொரோனா மூன்றாவது அலை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. குஜராத்தில் கோவிட் -19 நோய் தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும், வைரஸ் பரவுவதை மேலும் கட்டுப்படுத்த இனி வரும் வாரங்களுக்கு மாநிலத்தில் பல கட்டுப்பாடுகள் இருக்கும். இதற்கிடையில், மறு அறிவிப்பு வரும் வரை மாநிலத்தில் உள்ள பள்ளிகள் ஜூனியர் வகுப்புகளுக்கு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் தற்போதுள்ள இரவு ஊரடங்கு உத்தரவை பிப்ரவரி 11, 2022 வரை நீட்டிப்பது உட்பட, புதிய கோவிட்-19 வழிகாட்டுதல்களை வெளியிட குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.90,000 வரை சம்பள உயர்வு? கணக்கீட்டு விவரங்கள் இதோ!
குஜராத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு பிப்ரவரி 11 வரை தினமும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தொடரும். மேலும், மூடிய அரங்கங்களில் நடைபெறும் திருமண விழாக்கள் 150 பேருடனும், திறந்தவெளியில் நடைபெறும் திருமண விழாக்களை 300 பேருடனும் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அரசின் அனைத்து கட்டுப்பாடுகளையும் மக்கள் முறையாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது, கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தவறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.