இன்று முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் – புதிய வழிகாட்டுதல்கள் மாநில அரசு வெளியீடு!!
மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளை அளித்து மாநில அரசு அதற்கான புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
மத்திய பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 224 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாநிலத்தில் இதுவரை பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,88,649 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று 27 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை மாநிலத்தில் 8,615 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது.
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது – கல்விதுறை ஆலோசனை!!
நேற்று மாநில அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. ஜூன் 16ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை மக்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டுதல்களையும் மத்தியபிரதேச அரசு வெளியிட்டுள்ளது. நகர்ப்புறங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கும், சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை வார இறுதி ஊரடங்கு அமலுக்கு வருவதாகவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்கள்:
- அனைத்து அரசு அலுவலகங்களும் 100 சதவீத ஊழியர்களுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.
- அனைத்து சந்தைகளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும்.
- ஷாப்பிங் மால்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
- அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் ஒரு நேரத்தில் 6 நபர்கள் மட்டும் வழிபடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- உடற்பயிற்சி மையங்கள் மாலை 6 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும்.
தமிழகத்தில் ஜூன் 21க்கு மேல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
- உணவகங்கள் இரவு 10 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- திருமண விழாக்கள் அதிகபட்சம் 50 நபர்களுடன் அனுமதிக்கப்படும்.
- இறுதி ஊர்வலங்கள் அதிகபட்சம் 10 பேருடன் அனுமதிக்கப்படும்.
- அனைத்து சினிமா தியேட்டர்கள் மற்றும் நீச்சல் குளங்களும் திறக்கப்படும்.
- அனைத்து சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார, மத கூட்டங்களும் தடைசெய்யப்படும்.
- பள்ளிகள், கல்லூரிகள், பிற கல்வி நிறுவனங்கள் திறக்க அனுமதி அளிக்கவில்லை, இருப்பினும் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.