ஜூன் 20 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடல் – மாநில அரசு அதிரடி முடிவு!
மாநிலத்தில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இன்று (ஜூன் 17) முதல் வருகின்ற ஜூன் 20ம் தேதி வரை பள்ளிகள் அனைத்தும் மூடப்படுவதாக மேகாலயா அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்த முழு தகவல்களையும் இப்பதிவில் காணலாம்.
பள்ளி விடுமுறை
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இப்போது புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தற்போது மேகாலயா மாநிலத்தில் நிலவும் தீவிர மற்றும் மோசமான வானிலை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையின்படி, ‘சீரற்ற வானிலை மற்றும் IMD (இந்திய வானிலை ஆய்வுத் துறை) MET மையம் வெளியிட்ட எச்சரிக்கை காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு மேகாலயாவில் மிகக் கனமழையுடன் கூடிய கனமழை பெய்யும்.
TN Job “FB Group” Join Now
இதனால் ஜூன் 17 முதல் ஜூன் 20 வரை யுள்ள நாட்களில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும். அந்தந்தப் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான பாதுகாப்பு குறித்து அப்பகுதிகளின் நிலைமையை கவனத்தில் கொண்ட பின்னர் துணை ஆணையர்கள் முடிவு செய்வார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மேகாலயா மாநிலம் முழுவதும் இன்று முதல் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் ஜூன் 20 வரை செயல்படாது. இதுவரை மேகாலயா, அசாம் உள்ளிட்ட பல வடகிழக்கு பகுதிகளில் மோசமான வானிலை நிலவி வருகிறது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – புதிய அறிவிப்பு வெளியீடு!
குறிப்பாக கனமழை, நீர் தேக்கம் மற்றும் வெள்ளம் போன்ற சூழ்நிலைகளால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் கனமழையின் வானிலை முன்னறிவிப்புகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, மேகாலயா பள்ளிகள் ஜூன் 17 முதல் 20 வரை முழுமையாக மூடப்படும் என்றும் அனைவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் முற்றிலும் அவசியமான காரியங்களை தவிர வேறு எதற்காகவும் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.