அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு முடிவு!
தெலுங்கானா மாநிலத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் கிட்டத்தட்ட 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
சமீப காலமாக நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்து வருவதால் மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் தற்போது இடைவிடாத மழை பெய்து வருவதால், வழக்கமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தெலுங்கானாவில் இன்று (ஜூலை 12) முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து மாநில முதல்வர் கே சந்திரசேகர் ராவ் கூறுகையில், ‘மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார். அதாவது, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றின் நீர்மட்டம் 48 அடியைத் தாண்டியதால் நேற்று (ஜூலை 11) இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழக எல்லைகளில் 13 இடங்களில் கண்காணிப்பு பணி தீவிரம் – தக்காளி காய்ச்சல் பரவல் எதிரொலி!
குறிப்பாக, ஜெயசங்கர் பூபாலப்பள்ளி, முழுகு, மஞ்சேரியல், பத்ராத்ரி கொத்தகுடம், நிஜாமாபாத், நிர்மல், அடிலாபாத் மற்றும் தலைநகர் ஹைதராபாத் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. இதனால், அம்மாநிலத்தில் தற்போது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போது மாநிலத்தில் கனமழை குறித்த வானிலைத் துறையின் எச்சரிக்கையை அடுத்து உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.