தீவிரமெடுக்கும் கொரோனா, மீண்டும் பள்ளிகள் மூடல் – மாநில அரசின் திடீர் உத்தரவு!
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் அனைத்து நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு வருகின்றன. ஆனால் தற்போது டெல்லியில் கொரோனா மீண்டும் தலைதூக்கியுள்ளன. இதனால் தனியார் பள்ளிகளுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டு உள்ளது.
மீண்டும் பள்ளிகள் மூடல்:
சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின் உலகம் முழுவதும் அதிகரித்த கொரோனா தொற்று பாதிப்பு, படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவல் சற்று தணிந்து உலக நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. இருப்பினும் சீனாவில் கொரோனா மீண்டும் வேகமெடுத்தான் அந்நாட்டு அரசு பல நகரங்களை முடக்கி வருகிறது. இதை தொடர்ந்து தென் கொரியா, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்த நாடுகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 3ம் அலை வேகமெடுத்ததால், இரவு ஊரடங்கு முதல் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இந்த நடவடிக்கைகள் பலனாக ஜனவரி மாத இறுதியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. மார்ச் 31 உடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும் மாஸ்க் அணிவதை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதன் முக்கிய அடையாளமாக, நடப்பு கல்வியாண்டில் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. குறிப்பாக 10, 12 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தவும் திட்டமிட்டு கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வகையில் மாணவர்களும் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
பாக்கியாவை இழுத்து சென்ற போலீசார், கண்ணில் சிக்காமல் தப்பித்த கோபி – இன்றைய எபிசோட்!
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து உள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் பள்ளிகளுக்கு டெல்லி மாநில அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தனியார் பள்ளிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும். மேலும் மாணவர்கள் முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். கொரோனா தொற்று உறுதியானால் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வந்தால் உடனடியாக கல்வி இயக்குநரகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே மீண்டும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வருமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.