தொடர்ந்து தீவிரமடைந்து வரும் ஓமைக்ரான் வைரஸ் பரவல் – 21 பேருக்கு உறுதி என்று தகவல்!!
தென் ஆப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றான ஓமைக்ரான் வகை இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
ஓமைக்ரான் தீவிரம்:
உலகின் பல்வேறு நாடுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலுக்கி வந்த கொரோனா தொற்று முதலில் சீனாவில் உள்ள வுஹான் நகரில் உருவானது. பின்னர் இந்த பெருந்தொற்றால் இந்தியா, அமெரிக்கா, உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் பரவியது. அதனை தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை அனைத்து நாடுகளும் தீவிரப்படுத்தின. இருந்தபோதிலும் உருமாற்றம் அடைந்த கொரோனா வகைகளாக ஆல்பா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் உள்ளிட்ட பல தொற்றுகள் பரவ தொடங்கின.
‘பாரத் கவுரவ்’ சுற்றுலா ரயிலை இயக்க தனியாருக்கு அனுமதி – தெற்கு ரயில்வே அதிரடி!!
தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு அனைத்து வகை கொரோனா தொற்றுகளும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வகையாக ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று இதுவரை உலக அளவில் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 34 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கயலின் பிறந்தநாளை பெரிதாக கொண்டாட நினைக்கும் ஜனார்த்தனன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோடு!
அதனை தொடர்ந்து இந்தியாவில் கடந்த வாரத்திற்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மேலும் 18 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கர்நாடக மாநிலத்தில் 2, குஜராத்தில் 1, மகாராஷ்டிராவில் 8, டெல்லியில் 1, ராஜஸ்தானில் 1 என மொத்தம் 21 பேருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.