மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – உயரும் பலி எண்ணிக்கை! அதிர்ச்சி ரிப்போர்ட்!
இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 16,159 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும், அதிகரித்து வரும் தொற்றால் நாட்டில் முழு ஊரடங்கு விதிக்கப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 16,159 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,35,31,706 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து உயிரிழப்பும் நிகழ்ந்து வருகிறது. அதாவது நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 28 பேர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை? அரசின் திடீர் அறிவிப்பு!
இதனையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,270 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிகிக்சை பெற்று பூரண குணமடைந்து 15,394 பேர் வீடு திரும்பி உள்ளனர். அதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,29,07,327 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தோர் விகிதம் 98.53% ஆகவும் உயர்ந்துள்ளது. மறுபுறம் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த வருடம் இறப்பு விகிதம் சற்று குறைந்துள்ளது. அதே நேரம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,15,212 பேர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். தற்போது பெரும்பாலான மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதால் வைரஸ் தாக்கம் குறைந்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதுவரை நாட்டில் 1,98,20,86,763 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,95,810 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது உயர்ந்து வரும் பாதிப்புகள் கொரோனா நான்காம் அலையின் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் பாதிப்புகள் இருக்க கூடும் என்றும் கூறுகின்றனர்.