கொரோனா பரவலின் வேகம் அதிகரிப்பு.. 62 கோடியை நெருங்கும் பாதிப்பு – கட்டுப்பாடுகள் அமலாகுமா?
உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61.65 கோடியை தாண்டியுள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாகுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கொரோனா தொற்று:
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக 2020 ஆம் ஆண்டில் இந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. பின்னர் படிப்படியாக இந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஓரளவுக்கு கம்மி ஆனது. இதனால் மக்களும் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள்.
ஆனால் கடந்த சில நாட்களாக இந்தியா உள்பட ஒரு சில உலக நாடுகளில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் கூட சென்னையில் இந்த தொற்று பரவலின் வேகம் அதிகரிப்பதால் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61.65 கோடியை தாண்டியுள்ளது.
மீண்டும் மூடப்படும் பள்ளிகள்.. 9 நாட்கள் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இதன் மூலம் தற்போது வரை உலக அளவில் இந்த நோய் தாக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,65,18,663 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 59,58,21,197 பேர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 65,28,751 பேர் பலியாகியுள்ளனர். நோய் பாதிப்பு சற்று உயருவதால் மக்கள் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாகுமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்