கோபியின் மீதி கொலை வெறியில் இருக்கும் பாக்கியா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

0
கோபியின் மீதி கொலை வெறியில் இருக்கும் பாக்கியா - சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
கோபியின் மீதி கொலை வெறியில் இருக்கும் பாக்கியா - சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
கோபியின் மீதி கொலை வெறியில் இருக்கும் பாக்கியா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

பாக்கியாவை போலீசார் கைது செய்து சிறையில் வைத்த போது கூட கோபி உதவிக்கு வராத காரணத்தினால் கோபியின் மீது பாக்கியா கொலைவெறியில் இருக்கிறார். கோபியை பார்க்கும் போது பாக்கியா எப்படி நடந்துகொள்ள போகிறாரோ என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியாவிற்கு எப்போதுதான் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் தெரியவரப் போகிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு மயூவின் பிறந்தநாளுக்காக சமைத்து தரும்படி பாக்கியாவிடம் ராதிகா கேட்டிருந்தார்.

பாக்கியா பிரச்சனையை கண்டு கொள்ளாத கோபி, கோவப்படும் பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

பாக்கியாவும் அந்த குழந்தைகளுக்காக பார்த்து பார்த்து சுவையாக சமைத்து கொடுத்தார். ஆனால், பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு அனைத்து குழந்தைகளும் மயங்கியதால் பாக்கியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆர்டர் கொடுத்தவரையும் விசாரிக்க வேண்டும் என்பதற்காக ராதிகா மற்றும் கோபியையும் காவல் நிலையத்திற்கு கூட்டி சென்றுவிட்டனர். பாக்கியாவை போலீசார் கைது செய்ததுமே அவரை வெளியே கொண்டு வர குடும்பத்தில் உள்ள அனைவருமே கோபிக்கு கால் செய்கின்றனர். ஆனால், ராதிகாவும் காவல் நிலையத்தில் இருப்பதை அறிந்துகொண்டு கோபி யாரின் காலையும் அட்டென்ட் செய்யவே இல்லை.

விஜய் டிவி சீரியல்களில் TRP முதலிடத்தை பிடித்த “பாரதி கண்ணம்மா” – ரசிகர்கள் உற்சாகம்!

பின்பு, தான் எழிலுக்கு நினைவுக்கு வருகிறது. அதாவது பாக்கியா அந்த குழந்தைகளுக்காக சமைத்த சாப்பாட்டை தான் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டனர். ஆனால், குடும்பத்தில் உள்ள யாருக்கும் எதுவும் ஆகவில்லை. அதற்கு பிறகு தான் உணவில் யாரோ விஷத்தை கலந்திருக்க வேண்டும் என போலீசாரிடமும் நிரூபித்து பாக்கியாவை வெளியே கொண்டு வருகிறார். மனைவி ஆபத்தில் இருக்கும் போது உதவாத கணவன் எதற்கு என கோபியின் மீது பாக்கியா கோவப்படும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!