தமிழகத்தில் உயரும் மின் கட்டணம்? மின்வாரியத்துறை அதிரடி! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் உயர்வு குறித்து மக்களிடம் கருத்துக்களை கேட்டறிய கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் இந்த மின் கட்டண உயர்வால் சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின் கட்டணம்:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு சில இடங்களில் முன்னறிவிப்பு இன்றி மின்தடை ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தமிழக அரசு, இந்தியாவில் மின் உற்பத்தி சற்று குறைய தொடங்கியதால் இவ்வாறு மின்வெட்டுகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உக்ரைன் – ரஷ்யா போரினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நாட்டில் நிலக்கரி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் நிலக்கரி தட்டுப்பாட்டால் விலையும் உயர்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்வது குறையத் தொடங்கியது. இதனால் நாட்டில் மின் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது.
தற்போதைய அரசு தேர்தல் வாக்குறுதியாக மாதந்தோறும் மின் கணக்கீடு, வீடுகள் தோறும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குதல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருந்தது. இது குறித்து முயற்சிகள் நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த மின்கட்டணம் உயர்வு குறித்து பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்க கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் வீரமணி, உறுப்பினர் வெங்கடேசன், சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் விரிவுரையாளர் பணிக்கு கணினி வழியிலான தேர்வு – முழு விவரம் இதோ!
இதனை தொடர்ந்து மின் கட்டண உயர்வுகள் குறித்து விளக்கப்பட்டது. அதாவது, 200 யூனிட்களுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்தி வருபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27 ம், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றுக்கு ரூ.72 ம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்கள் வரை மின்நுகர்வு செய்யும் 18.82 லட்சம் வீடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.147.5 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் மற்றும் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்