ஓமைக்ரான் பரவல் காரணமாக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடு – அச்சத்தில் பொதுமக்கள்!!
நாடு முழுவதும் வெகு வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தற்போது அமெரிக்காவில் தீவிரமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அந்நாட்டு அரசு கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகளை அறிவித்து இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஓமைக்ரான்:
முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் வெகு வேகமாக பரவி வருகிறது. இதுவரை ஐரோப்பிய நாடுகள் உட்பட 34 நாடுகளில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது அமெரிக்காவும் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பும் தொடங்கியுள்ளதால் அமெரிக்க மாகாணங்களின் சுகாதார அமைப்புகள் அச்சத்தில் உள்ளன.
கதிரால் கொடூரமாக தாக்கப்படும் கண்ணன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்தகட்ட கதைக்களம்!
அந்த வகையில் நியூயார்க்கில் மட்டும் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நெப்ராஸ்கா, மினசோட்டா, கலிபோர்னியா, ஹவாய், கலரோடா, உத்தாஹ் உள்ளிட்ட மாகாணங்களில் ஓமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது நியூஜெர்சி, ஜார்ஜியா, பென்சில்வேனியா, மேரிலேண்டிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறாக அங்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வித்தியாசமாக ரீல்ஸ் செய்துள்ள ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இனியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
இந்த தொற்று பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிக்கப்பட்டோர் சமீபத்தில் வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் மற்றும் பயணம் மேற்கொள்ளாதவர் என அனைவருக்கும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அமெரிக்காவில் போக்குவரத்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வேறு நாடுகளில் இருந்து வரும் பயணியர் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.