தமிழகத்தில் மீண்டும் அமலாகிறதா முழு ஊரடங்கு? பரவி வரும் புதிய வைரஸ்! பொதுமக்கள் அச்சம்!
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகளவு நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பரவி வரும் “பிஏ 2” வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முழு ஊரடங்கு:
தமிழ்கத்தில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் கொரோனா வைரஸின் 3ம் அலை தாக்குதல் இருக்கும் என்றும், 3ம் அலையினால் குழந்தைகள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட உள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வந்தனர். ஆனால் தமிழக அரசு தீவிரமாக நோய் தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து வந்த காரணத்தால் 3ம் அலையின் தாக்கம் தமிழகத்தில் அப்போது எழவில்லை. டிசம்பர் மாத இறுதியில் நாடு முழுவதும் ஓமைக்ரான் வகை புதிய வைரஸ் மற்றும் கொரோனா 3ம் அலையின் தாக்குதல் ஆரம்பித்தது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம் – முன்னிலையில் திமுக!
இந்த வகை வைரஸ் அதிவேகத்தில் பரவும் தன்மை கொண்டதாக இருப்பதால், இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, நோய் பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பிறகு பிப்ரவரி 1ம் தேதி 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளுக்கு, நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் பிரச்சார கூட்டங்களில் வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் முழுமையாக கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை. இதனால் கொரோனா தாக்குதலின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும், மேலும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் திரிபான, “பிஏ 2” வைரஸ் தொற்று பிரிட்டன் நாட்டில் இருந்து பரவி வருகிறது. அதிக வேகத்தில் பரவி வரும் இந்த தொற்று அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிஏ 2 வைரஸ் நாட்டில் பரவ தொடங்கி, அதன் விளைவுகளை பொறுத்தே மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.