சென்னை: ஆபரண தங்கத்தின் விலை அதிரடி குறைவு – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 264 குறைந்துள்ளது. சில நாட்களுக்கு பிறகு இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் தங்க அணிகலன்கள் வாங்க ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் கடந்த வருடம் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் உயர்ந்த தங்கம் விலை தற்போது வரை குறையவில்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆபரணத் தங்கம் விலை அமெரிக்க டாலரின் மதிப்பை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நடைபெற்றது. இதன் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நேரத்தில் மேலும் பங்குச்சந்தையும் சரிந்து வருகிறது. அதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டனர். இந்த நேரத்தில் இந்தியாவில் மத்திய அரசு தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி மற்றும் இறக்குமதி வரியை உயர்த்தியது.
Exams Daily Mobile App Download
அதனால் தங்கம் விலை இந்தியாவில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. எப்போது நகை விலை குறையும் என்று பொதுமக்களும், நகைப்பிரியர்களும் எதிர்பார்த்து வந்தனர். அப்போது நகை விலை குறைந்தாலும் அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் உயர்ந்தது. இம்மாத தொடக்கத்திலேயே தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 160 குறைந்து ஒரு சவரன் ரூ.38,360க்கும் ஒரு கிராம் ரூ.4,795 க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்துள்ளது.
TET தேர்வு முதல் தாள் தேர்வு தேதி மாற்றம்? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 38,880-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல ஒரு கிராம் தங்கம் ரூ.33 குறைந்து ரூ.4,860 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.64.00 க்கும், ஒரு கிலோ 64,000-க்கும் விற்பனையாகி வருகிறது. தற்போது தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மற்றும் பெண்கள் தங்கம் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.