இனி தடாலடியாக உயர உள்ள பால் & இறைச்சி விலை – அதிர்ச்சியில் பொதுமக்கள்!
நாட்டில் விலைவாசி உயர்வு மக்களை சமீப காலமாக சற்று அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில், தற்போது பால் மற்றும் இறைச்சி ஆகியவற்றின் விலை மேலும் உயர போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விலை உயர்வு:
நாட்டில் விலைவாசி உயர்வு என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் விலை உயர்வு சில சமயம் அரசின் கையை மீறி விடுகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது.
கடந்த சில மாதங்களில் பெய்த கடும் மழை காரணமாக பயிர்கள் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளது. இதனால், கால்நடைகளுக்கான தீவனத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தீவனங்களின் விலையானது கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கத்தினால் 25.54% ஆக அதிகரித்துள்ளது. கால்நடைகளுக்கான தீவனத்தின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மிகவும் திணறி வருகின்றனர்.
இந்த மாவட்ட மக்களே உஷார்.. தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை கொட்டித் தீர்க்கும்!
Exams Daily Mobile App Download
இதனை சமாளிப்பதற்காக விவசாயிகள் பால் மற்றும் இறைச்சி போன்றவற்றின் விலையை உயர்த்தி வருகின்றனர். கால்நடைகளுக்கான தீவன விலையை பொறுத்த வரையில், எள்ளு புண்ணாக்கு தற்போது குவிண்டாலுக்கு ரூ.3,000 ஆகவும், கோதுமை வைக்கோல் குவிண்டாலுக்கு ரூ.2,000 ஆகவும், வைக்கோல் 1 கிலோ ரூ.16 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பால் மற்றும் இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகும் வாய்ப்புள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்