சென்னை: மீண்டும் அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. தற்போது தங்கம் விலை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மற்றும் பெண்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் எப்போது தங்கம் விலை குறையும் என்றும் எதிர்பார்த்து வருகின்றனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் தங்க அணிகலன்கள் அணிவது என்பது ஒரு வகையான கலாசாரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தினந்தோறும் ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இதற்கு பங்கு சந்தை சரிவு, உலக பொருளாதாரம் போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை மாற்றத்தில் அமெரிக்க டாலருக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதாவது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிகிறது என்றால் தங்கத்தின் விலையும் விலை அதிகரிக்கும். மேலும் முதலீட்டாளர்கள் அதிகம் தங்கத்தின் மீது முதலீடு செய்வதாலும் தங்கம் விலை அதிகரிக்கிறது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரின் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியாலும் தங்கம் விலை உயர்ந்தது. இதனால் சாமானிய மக்களும், நகைப் பிரியர்களும் நகை வாங்குவதில் பொருளாதார ரீதியான சிக்கலை சந்தித்தனர். உலக நாடுகளில் தங்கத்தை கொள்முதல் செய்வதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் தங்கத்தின் மீதான GST வரி 3% உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று தங்கம் விலை ரூ. 400 உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளியில் 3D மூலமாக தீவிர விசாரணை – தடயங்கள் சேகரிப்பு!
இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.37,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.4,680க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாரம் இறுதி நிலையை எட்ட உள்ள நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.