நாளுக்கு நாள் தொடர்ந்து சரியும் ஆபரணத்தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் மக்கள் தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை கடந்த மாதம் உயர்த்தியது. இந்த காரணத்தால் ஆபரண தங்கத்தின் விலை மக்கள் எதிர்பாராத அளவு உயர்ந்தது. அதனை தொடர்ந்து ஜிஎஸ்டி வரியும் உயர்த்தபட்டது. இந்த வரி உயர்வால் குறைந்தபட்சமாக தங்கம் விலை ரூ 1000 வரை அதிகரித்தது. இதன் மத்தியில் தங்கம் விலை நிர்ணயிப்பில் அமெரிக்க டாலரின் மதிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த டாலரின் மதிப்பை பொறுத்தே தங்கம் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 1 மாத காலமாக அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவிழந்து உள்ளது. அதனால் ஆபரணத்தங்கத்தின் விலை சரிந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 38,000க்கு விற்கப்பட்டு வந்த தங்கம் கடந்த 24ம் தேதி நிலவரப்படி ரூ. 160 குறைந்து ஒரு சவரன் ரூ. 37,200க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்றைய (செப்.27) காலை நேர நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.36,880 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நாளை (செப். 28) மின்தடை ஏற்படும் பகுதிகள் – பொதுமக்கள் கவனத்திற்கு!
Exams Daily Mobile App Download
அதே போல ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,610 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.60.70 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி, தசரா அடுத்து வரும் போகும் தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்