சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை அதிகரித்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியிலும், திருமணத்திற்கு நகைகள் வாங்குவோர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை:
உலக அளவில் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை லண்டனில் தான் உள்ளது. இங்கு தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து அதன் உற்பத்தி அளவிற்கேற்ப தங்கத்தின் சந்தை விலையை வியாபாரிகள் நிர்ணயிக்கின்றனர். பிறகு நிர்ணயிக்கக் கூடிய விலைக்கு ஏற்றது போல அனைத்து நாடுகளில் உள்ள வியாபாரிகள் தங்கத்தை விற்பனை செய்கின்றனர். அண்மையில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் உலகச் சந்தையில் டாலர் மதிப்பு குறைந்தது. அதனால் மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் தங்க முதலீட்டை உயர்த்தியது. இதன் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
Exams Daily Mobile App Download
மற்ற நாடுகளை தொடர்ந்து அதிக அளவு தங்க ஆபரணங்களை பயன்படுத்தும் இந்தியாவில் வரன்முறை இல்லாத அளவுக்கு தங்கம் விலை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் கடந்த மாதம் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி மற்றும் ஜிஎஸ்டி வரியை உயர்த்தியது. அதனால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை நேர நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 38,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்துள்ளது.
IT ஊழியர்களுக்கு புதிய WFH விதிகள் – முக்கிய தகவல் வெளியீடு
இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,120-க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ. 5 உயர்ந்து ரூ.4,890-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இன்று வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது. அதாவது ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து, ரூ.64.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றை ஒப்பிடும் போது இன்று தங்கத்தின் விலையில் பெரிதாக மாற்றம் இல்லை.