சென்னை: தொடர்ந்து சரியும் ஆபரணத்தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் ஹாப்பி!
தமிழக மக்கள் எப்போது நகை விலை குறையும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 168 சரிந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் தங்க அணிகலன்களை விரும்பும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை:
தங்கம் விலையானது அமெரிக்க டாலரின் மதிப்பை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி டாலரின் மதிப்பு அதிகரித்தால் தங்கத்தின் விலையும் அதிகரிக்கும். அதே போல தங்கத்தின் டாலரின் விலை குறைந்தால் தங்கம் விலையும் குறையும். கடந்த வருடங்களில் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கின் விளைவாக தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இதனால் பங்குச்சந்தையும் சரிவை சந்தித்தது. இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் நாட்டின் பொருளாதார சரிவால் மத்திய அரசு ஜிஎஸ்டி மற்றும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது. அதனால் இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் திருமணத்திற்காக நகைகள் வாங்க திட்டமிட்டோர் அதிருப்தி அடைந்தனர்.
TN TRB PG Assistant தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
Exams Daily Mobile App Download
இந்த நேரத்தில் சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 168 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று ரூ. 37,440க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ. 21 குறைந்து ரூ.4,680க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் தொடர்ந்து 4வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்