நாளுக்கு நாள் தீயாய் உயரும் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
விழாக்காலம் தொடங்கிய இந்த மாதம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை ஏற்றம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கத்தின் விலை:
மதிப்புமிக்க உலோகங்களில் ஒன்றான தங்கத்தை மக்கள் ஆபரணங்கள், சேமிப்பு என பல்வேறு வழிகளில் பயன்படுத்தி வருகின்றனர். பல நேரங்களில் மக்கள் தங்கத்தை அடகு வைத்தே, தங்களின் பொருளாதார நிலையை சமாளித்து வருகின்றனர். மேலும் எந்த நாட்டிற்குச் சென்றாலும் தங்கத்தை வைத்து எளிமையாக உள்ளூர் ரொக்கத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
இப்படி பல்வேறு வசதிகள் உள்ளதால், மக்கள் பலரும் தங்கத்தைத் தொடர்ந்து வாங்கி சேமித்து வருகின்றனர். தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்காலம் தொடங்கியுள்ளதால் மக்கள் வழக்கம்போல நகை வாங்க திட்டமிட்டிருந்த இந்த நிலையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்து வருகிறது.
மத்திய அரசின் குரூப் B & C தேர்வு – தமிழக மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு! வெற்றி நிச்சயம்!
Exams Daily Mobile App Download
இன்று சென்னையில் ஒரு கிராம் அபரணத்தங்கம் ரூ.5 அதிகரித்து ரூ.4,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.38,720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் கிராம் ரூ.5,280க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.66.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்