இப்போ தான் சீரியல் கலைகட்டுது.. ஹனிமூன் சென்ற இடத்தில் கோபியை வச்சு செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!
பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கோபி ராதிகாவிற்கு திருமணம் முடிந்து இருக்கும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பாக்கியலட்சுமி ஆகிய இரு சீரியல்கள் இணைக்கப்பட்டு மகா சங்கமமாக டெலிகாஸ்ட் செய்யப்பட உள்ளது.
பாக்கியலட்சுமி:
யார் எக்கேடு கெட்டு போனால் என்ன என கோபி ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் பாக்கியா மனம் தளராமல் தன் கையே தனக்கு உதவி என சமையல் காண்ட்ராக்ட் எடுத்து சுயமாக முன்னேறி வருகிறார். ஈஸ்வர, ராமமூர்த்தி, இனியா என அனைவரும் கோபியை கைகழுவி விட்டனர். அதுவே கோபிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது மேலும் கோபிக்கு அதிர்ச்சி தரும் வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் கோபி வாழ்க்கையில் என்ட்ரி கொடுக்க போகிறது. அதாவது திருமணம் முடிந்து கோபி ராதிகாவுடன் கொடைக்கானலுக்கு ஹனிமூன் செல்கிறார். அங்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் வருகிறது.
தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை – மின்சார வாரியம் தகவல்!
Exams Daily Mobile App Download
மேலும் ஹோட்டலில் கோபியை ராதிகாவுடன், கண்ணன் பார்த்துவிட பாக்கியா அக்காவுக்கு துரோகம் செய்கிறீர்களா என மூர்த்தியிடம் கோபியை பற்றி கூற போகிறார். ஏற்கனவே மூர்த்திக்கும் கோபிக்கும் பெரிய சண்டை சென்ற மகா சங்கமத்தில் நடந்தது. தற்போது கோபி ராதிகாவை திருமணம் வேறு செய்துவிட்டதால் கண்டிப்பாக மூர்த்தி சும்மா இருக்கமாட்டார். ஆக மொத்தம் இனிவரும் எபிசோடுகள் ரணகளமாக இருக்கப்போகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்